கோவையில் காட்டு யானை தாக்கியதில் முதியவர் படுகாயம்

கோவை: கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே காட்டு யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

கோவை: கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே காட்டு யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்தார். 

தமிழக - கேரள எல்லைப்பகுதியான ஆனைகட்டி அருகே துமனூர் பகுதியில் உள்ள பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியதுரை (58). இவர் நள்ளிரவில், காட்டு வழியாக தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு புதர்களில் மறைந்திருந்த ஒற்றை யானையை அவர் கவனிக்கவில்லை. இந்த நிலையில், திடீரென யானை தனது தும்பிக்கையின் மூலம் அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டது. இதனால், பலத்த காயமடைந்த பெரியதுரையை, அப்பகுதி மக்கள் உடனடியாக கோவை அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...