காவிரி மேலாண்மை வாரியம் விவகாரம் : பிரபலங்களின் கருத்துக்கள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விடுத்த காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விடுத்த காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவை பின்வருமாறு,  

 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்: காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நியாயமான  தீர்வாக இருக்க முடியும். காவிரி விவகாரத்தில் நீதி கிடைக்கும் என உண்மையாக நம்புகிறேன். என்றார்.

துரைமுருகன் (தி.மு.க.,): காவிரி விவகாரத்தில் கடைசி நேரத்தில் அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி என்ன ஆகப்போகிறது..? இவ்வாறு கூறினார்.  

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் : காவிரி விவகாரத்தில் மத்திய அரசை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். என்றார்.  

மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் : கர்நாடக தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு செயல்படவில்லை. தீர்ப்பின் முக்கிய பகுதிகளில் ஸ்கீம் என்றுதான் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. தமிழக உரிமைகளை நிலைநாட்டுவதற்கு 100% பாஜக அரசு உறுதுணையாக இருக்கும். எனத் தெரிவித்தார். 

குமார், அருண்மொழித்தேவன் (அ.தி.மு.க., எம்.பி.க்கள்) : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் ராஜினாமா செய்வோம். இவ்வாறு கூறினர்.

 

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் : காவிரி விவகாரத்தில், ஓட்டு வேட்டைக்காக அரசியல் செய்ய வேண்டாம். காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். என்றார். 

கவிஞர் வைரமுத்து : உச்சநீதிமன்றத் தீர்ப்பே எங்கள் உழவர்களின் வேட்டியைக் கிழித்துவிட்டது. உழவர்கள் வேட்டி இழந்தால் நாடு நிர்வாணமாகி விடும். காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று குழு அமைக்க உச்சநீதிமன்றமே நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக் கூறினார்.  

பழ. நெடுமாறன் : தமிழகத்துக்கான காவிரி நீரை பெற்றுத் தருவதில் மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது. என்றார்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் : ஆசியாவின் மிகப்பெரிய சமவெளிப் பகுதிகளுள் ஒன்று காவிரி டெல்டா. அது அழிவது தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே கேடு. எனக் குறிப்பிட்டார்.  

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது. கண்காணிப்புக்குழு வேண்டுமானால் அமைக்கலாம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால், அதற்கு முழு பொறுப்பு மத்திய பா.ஜ.க., அரசுதான். என்றார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...