ரூ. 150 லஞ்சம் வாங்கிய மருத்துவமனை பணியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் உடற்தகுதி சான்றிதழ் வழங்க ரூ. 150 லஞ்சமாகப் பெற்ற ஊழியருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் உடற்தகுதி சான்றிதழ் வழங்க ரூ. 150 லஞ்சமாகப் பெற்ற ஊழியருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர், கோவை காந்திபுரம் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2008-ம் ஆண்டு உடற்தகுதி சான்றிதழ் வேண்டி கோவை அரசு மருத்துவமனையில் விண்ணப்பித்துள்ளார். அங்கு, ரெக்கார்ட் கிளர்க்காக பணிபுரிந்து வந்த மணியன் என்பவர், சான்றிதழ் அளிக்க ரூ. 150 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க மனமில்லாத ரமேஷ், இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். 

பின்னர், லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய நோட்டுகளை பெற்றுக் கொண்ட ரமேஷ், அதனை மணியனிடம் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு பதுங்கிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், மணியனை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக மணியனுக்கு இரண்டாண்டு சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதம் விதித்து நீதிபதி ஜான் மினோ தீர்ப்பளித்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...