கோவை அம்மன் குளம் பகுதியில் அனுமதி இன்றி விநாயகர் சிலையை வைத்த மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்ததை கண்டித்து அவர்களது உறவினர்கள் இராமநாதபுரம் காவல் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை : கோவை அம்மன் குளம் பகுதியில் அனுமதி இன்றி விநாயகர் சிலையை வைத்த மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்ததை கண்டித்து அவர்களது உறவினர்கள் இராமநாதபுரம் காவல் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அம்மன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (32), இவர தனது நண்பர்களான பிரகாஷ் (34), பத்ரன் (28) ஆகிய இருவருடன் சேர்ந்து கிட்னி சென்டர் பகுதியில் உள்ள ஹவுசிங் யூனிட் அருகில் அனுமதி இன்றி விநாயகர் சிலையை வைத்தார். இதைத்தொடர்ந்து, தாசில்தார் அனுமதி இன்றி சிலை வைத்ததாகக் கூறி அதனை அகற்ற அப்பகுதி இளைஞர்களை வலியுறுத்தினார். ஆனால், சிலை வைத்த மூவரும் அதனை எடுக்க மறுத்தனர். இதைத் தொடர்ந்து, அப்பகுதி இளைஞர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், தாசில்தார் இராமநாதபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிலை வைத்த மூவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய கோரி அவர்களது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இராமநாதபுரம் காவல் நிலையம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.