கோவையில் அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்த மூவர் கைது : பொதுமக்கள் சாலை மறியல்

கோவை அம்மன் குளம் பகுதியில் அனுமதி இன்றி விநாயகர் சிலையை வைத்த மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்ததை கண்டித்து அவர்களது உறவினர்கள் இராமநாதபுரம் காவல் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.


கோவை : கோவை அம்மன் குளம் பகுதியில் அனுமதி இன்றி விநாயகர் சிலையை வைத்த மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்ததை கண்டித்து அவர்களது உறவினர்கள் இராமநாதபுரம் காவல் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.



அம்மன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (32), இவர தனது நண்பர்களான பிரகாஷ் (34), பத்ரன் (28) ஆகிய இருவருடன் சேர்ந்து கிட்னி சென்டர் பகுதியில் உள்ள ஹவுசிங் யூனிட் அருகில் அனுமதி இன்றி விநாயகர் சிலையை வைத்தார். இதைத்தொடர்ந்து, தாசில்தார் அனுமதி இன்றி சிலை வைத்ததாகக் கூறி அதனை அகற்ற அப்பகுதி இளைஞர்களை வலியுறுத்தினார். ஆனால், சிலை வைத்த மூவரும் அதனை எடுக்க மறுத்தனர். இதைத் தொடர்ந்து, அப்பகுதி இளைஞர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 



இந்த நிலையில், தாசில்தார் இராமநாதபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிலை வைத்த மூவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய கோரி அவர்களது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இராமநாதபுரம் காவல் நிலையம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...