2019-ம் ஆண்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு : தமிழக அரசு

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அரசு சார்பில் 2015-ம் ஆண்டு செப்டம்பரில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் விமரிசையாக நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் 2.42 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதலீட்டாளர்களுடன் மேற்கொள்ளப்பட்டன. 

இந்நிலையில், இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டை இந்த ஆண்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டது. இதுதொடர்பாக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். சமீபத்தில் சட்டசபையில் பேசிய முதலமைச்சர், இந்த ஆண்டு இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்தார். எனவே, ஆலோசனைக்குப் பிறகு மாநாடு நடக்கும் இடம், தேதி பற்றி விரைவில் முடிவு செய்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், உலக முதலீட்டாளர் மாநாடு அடுத்த ஆண்டுக்கு மாற்றப்பட்டிருப்பதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறும் என்றும், இதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2018-ன் தனி அதிகாரியாக மாற்றுத்திறனாளிகள் நலக் கமிஷனர் வி. அருண் ராய் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...