சுகாதார சீர்கேட்டை கண்டித்து உதகை நகராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டத்தில் சுகாதாரம் சீர்கெட்டு வருவதாகக் கூறி இன்று நகராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் சுகாதாரம் சீர்கெட்டு வருவதாகக் கூறி இன்று நகராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



சுற்றுலா நகரமான உதகையில் சுற்றுலா தலங்கள், சாலையோரங்களில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில், நகர மன்ற உறுப்பினர்கள் இல்லாததால் அனைத்து வார்டுகளிலும் கழிவு நீர் வழிந்தோடுவதால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும், போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருவதாகவும், போதிய பார்க்கிங் வசதியில்லாததால் கோடப்மந்து கால்வாய் மீது காங்கீரிட் கட்டிடம் அமைத்து வாகனங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நீலகிரி மாவட்ட தி.மு.க.,வினர் உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இக்கோரிக்கைகளை விரைவில் செயல்படுத்தாவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை மற்றும் மாவட்டம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்று அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...