பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட அனைவரும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் - கேரளா நிதியமைச்சர்

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட அனைவரும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேரளா நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கூறியுள்ளார்.

திருப்பூர்: பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட அனைவரும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேரளா நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கூறியுள்ளார்.

திருப்பூரில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மத்திய ஜி.எஸ்.டி குழு உறுப்பினரும் , கேரள நிதியமைச்சருமான தாமஸ் ஐசக் திருப்பூர் வந்துள்ளார். இதனையொட்டி திருப்பூரில் தொழில் துறையினருடனான கலந்துரையாடல் கூட்டம் ராயபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.



இதில் கலந்து கொண்ட தாமஸ் ஐசக் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "திருப்பூர் போன்றே சூரத், லூதியானா போன்ற பின்னலாடை நகரங்களும் பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி-யால் அதிகளவில் பாதிக்கப்பட்டன. 

பாதிப்படைந்த அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். விரைவில் மத்திய அரசு கொண்டு வரவுள்ள தாராள பொருளாதார கொள்கையால் வெளிநாட்டினர் எளிதாக இந்தியாவில் தொழில்துவங்க வசதியாகும். அதனை இந்திய தொழில் நிறுவனங்கள் இணைந்து தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தொழில் துறையினர் ஜி,எஸ்.டி வரிவிதிப்பில் பின்னலாடைத் துறையினருக்கான சலுகைகளைப் பரிந்துரைக்க வேண்டும்." என்றனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...