திருப்பூர் கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்காயிரம் கோழிகள் உயிரிழப்பு

வெள்ளகோவில் பகுதியில் உள்ள கோழி பண்ணை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் தீயில் உயிரிழந்தன.

திருப்பூர்: வெள்ளகோவில் பகுதியில் உள்ள கோழி பண்ணை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் தீயில் உயிரிழந்தன. 

வெள்ளகோவில் அருகேயுள்ள வேப்பம்பாளையம் பகுதியில் ஜெகதீசன் என்பவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணை உள்ளது. இன்று காலை நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த போது அவரது கோழி பண்ணை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

இதனையடுத்து ஜெகதீசன் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். 

இந்த தீ விபத்தில் பண்ணையிலிருந்த அனைத்து பிராய்லர் கோழிகளும் தீயில் கருகி உயிரிழந்தன. இறந்த கோழிகளின் மதிப்பு பல லட்ச ரூபாயாகும்.



அதிர்ஷ்டவசமாக அருகில் இருந்த இன்னொரு கோழி பண்ணை தப்பியது. இதிலும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மின்சார கசிவின் காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்தச் சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...