சுத்திகரிக்கப்படாத குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து திருப்பூரில் சாலைமறியல்

சுத்திகரிக்கப்படாத குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து திருப்பூர் ராயர்பாளையம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர்: சுத்திகரிக்கப்படாத குடிநீர் வழங்காத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து திருப்பூர் ராயர்பாளையம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பல்லடம் அருகே ராயர்பாளையம் அபிராமி நகரில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு பல்லடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2 மாதங்ககளாக அப்பகுதிக்கு விநியோகிக்கப்படும் குடிநீருடன் சாக்கடைக்கழிவு நீர் கலந்து வருவதாகப் புகார் எழுந்தது. இதனால் தண்ணீரைப் பயன்படுத்த முடியாமல் லாரி தண்ணீரை விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் நிலை ஏறப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இது குறித்து பலமுறை நகராட்சி அலுவலகத்தில் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் அதிருப்தியடைந்த அபிராமி நகர் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை ராயர்பாளையம் - திருப்பூர் சாலை சந்திப்பில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடம் விரைந்து சென்ற போலீசார், பொதுமக்களிடம் பேச்சு வார்ததை நடத்தினர். விரைவில் சாக்கடை கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம்போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...