கோவையில் சாலையை மறித்து கட்டப்பட்ட பேனர் கலாச்சாரத்தால் நிகழும் விபத்துகள்

கோவையில் இருவழிப் பாதையை மறித்துக் கட்டப்பட்ட பேனரால் இருசக்கர வாகனத்தின் மீது டெம்போ மோதிய விபத்துக்குள்ளாகியிருப்பது வாகன ஓட்டிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : கோவையில் இருவழிப் பாதையை மறித்துக் கட்டப்பட்ட பேனரால் இருசக்கர வாகனத்தின் மீது டெம்போ மோதிய விபத்துக்குள்ளாகியிருப்பது வாகன ஓட்டிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை - சத்தியமங்கல் சாலையில் உள்ள சரவணம்பட்டி என்ற பகுதியில் காப்பிக்கடை என்னும் இடம் உள்ளது. அங்கு, ஆளுங்கட்சியினர் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. 



கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேனர்கள் வைக்கப்படுவதே சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இருவழிச்சாலையை மறித்து அந்தப் பேனர் கட்டப்பட்டிருந்தது. இதனால், வாகனங்கள் ஒருவழிப் பாதையை மட்டும் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மீது டெம்போ பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. 

விபத்துக்களைத் தடுக்கும் வகையிலும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நோக்கிலும் அரசின் சார்பில் இருவழிச்சாலைகள் அமைக்கப்படும் நிலையில், அரசு நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக இதுபோன்று சாலைகளை மறித்து இடையூறு ஏற்படுத்துவது வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...