பிப்.,12-ம் தேதி முதல் எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்

டேங்கர் லாரி உரிமையாளர்கள் 12-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

டேங்கர் லாரி உரிமையாளர்கள் 12-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளுக்கான டெண்டர் முறையில் மத்திய அரசு புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இதுவரை மண்டல வாரியாக டெண்டர் நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்தந்த மாநிலங்களில் புதியதாக டெண்டர் நடத்தப்படும் என்றும், அதில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. டெண்டர் தொடர்பான புதிய அறிவிப்பைத் திரும்ப பெறாவிட்டால் வேலைநிறுத்தம் செய்யப்படும் எனவும் எச்சரித்திருந்தது.

இந்நிலையில், தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டம் நாமக்கல்லில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில், மத்திய அரசின் புதிய டெண்டர் முறையைக் கைவிட வேண்டும், கடந்த காலங்களில் நடைபெற்றது போலவே டெண்டர் நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 12-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.

திட்டமிட்டபடி, டேங்கர் லாரிகளின் போராட்டம் நடைபெற்றால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...