தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு தீவிரம் : மத்திய அமைச்சர்

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்திய அரசு தீவிரமாக இருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினிகுமார் சௌபே தெரிவித்துள்ளார்.

கோவை: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்திய அரசு தீவிரமாக இருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினிகுமார் சௌபே தெரிவித்துள்ளார். 

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் 10 மாடி கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி வசதி பிரிவை இன்று திறந்து வைத்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், ''ஏழைகளுக்குக் குறைந்த செலவில் தரமான சிகிச்சை அளிப்பதன் மூலம் எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. ராமகிருஷ்ணா மருத்துவமனையின் பெயர் துறவி ராமகிருஷ்ணாவை நினைவுக்குக் கொண்டு வருகிறது. மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த பட்ஜெட்டில் மக்களின் மருத்துவத்திற்காக ரூ. 1,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

மோடி தலைமையிலான அரசு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பொதுமக்களின் நலனில் அதிகம் கவனம் செலுத்துகிறது. இதற்காக நாடு முழுவதும் 1.5 லட்சம் மருத்துவ மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாக 24 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. 2018-2019ஆம் ஆண்டில் ஏழைகளுக்கு தடுப்பூசி உள்ளிட்டவற்றுக்கு ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 6 மாநிலங்களில் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஏழைகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். 

தமிழகத்தில் வேகமாகப் பரவி வந்த டெங்குவைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசியுள்ளேன்.” இவ்வாறு கூறினார். 

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...