தீபா வீட்டிற்கு வந்த டுபாக்கூர் வருமான வரித்துறை அதிகாரி தப்பியோட்டம்

ஜெ.தீபா வீட்டிற்கு வந்த போலி வருமான வரித்துறை அதிகாரி சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெ.தீபா வீட்டிற்கு வந்த போலி வருமான வரித்துறை அதிகாரி சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அரசியலில் குதித்த அவர் எம்ஜிஆர் ஜெயலலிதா தீபா பேரவை என்ற பேரவையை தொடங்கினார். தனது பேரவையில் பதவி கொடுப்பதாக கூறி பலரிடம் பலகோடி ரூபாய் பணம் மோசடி செய்ததாக தீபா மற்றும் அவரது டிரைவர் ராஜா மீது போலீஸில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், இன்று காலை சென்னை தியாகராயர் நகரில் உள்ள தீபா வீட்டிற்குத் தன்னை வருமான வரித்துறை அதிகாரி மித்தேஷ்குமார் என்று கூறிக்கொண்டு ஒரு நபர் வந்தார். அவர் கையில் வாரண்டு மற்றும் ஐடி ஆகியவை வைத்திருந்ததாகத் தெரிகிறது. 

அவர் மீது தீபா வீட்டில் இருந்தவர்களுக்குச் சந்தேகம் ஏற்படவே போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், வருமான வரித்துறை என்று கூறி வந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் வீட்டின் சுவர் மீது ஏறி குதித்து தப்பியோடினார். 

காவல் துறை அதிகாரிகள் அவரை துரத்திச் சென்றனர். ஆனால், அதற்குள் அருகில் இருந்த வணிக வளாக கட்டிடத்திற்குள் புகுந்த அந்த நபர் மாயமானார். தற்போது அவரை போலீசார் தேடி வருகின்றனர். 

இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...