கூடலூர் வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்க தோட்டக்கலைத்துறை முயற்சி

நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் விலங்குகள், பறவைகள் போன்று, வண்ணத்துப்பூச்சிகளும் அதிகளவில் காணப்படுகிறது. சீசன் காலத்தில் விவசாய தோட்டம், குடியிருப்பு பகுதிகளில் அவற்றின் அழகை ரசிக்க முடியும். வண்ணத்துப்பூச்சிகளால் பூக்களில் அதிக மகரந்த சேர்க்கை நடந்து, விவசாயத்தில் விளைச்சலும் அதிகம் கிடைப்பதால், விவசாயிகளின் நண்பனாகவும் உள்ளது.

நீலகிரி : நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் விலங்குகள், பறவைகள் போன்று, வண்ணத்துப்பூச்சிகளும் அதிகளவில் காணப்படுகிறது. சீசன் காலத்தில் விவசாய தோட்டம், குடியிருப்பு பகுதிகளில் அவற்றின் அழகை ரசிக்க முடியும். வண்ணத்துப்பூச்சிகளால் பூக்களில் அதிக மகரந்த சேர்க்கை நடந்து, விவசாயத்தில் விளைச்சலும் அதிகம் கிடைப்பதால், விவசாயிகளின் நண்பனாகவும் உள்ளது.



சீசன் காலத்தில் கூடலூர், முதுமலை புலிகள் காப்பகப்பகுதியில் காலை நேரத்தில் ஆயிரக்கணக்கான வண்ணத்துப்பூச்சிகள் தினமும் கூட்டம் கூட்டமாக பறந்து செல்லும். இவற்றின் அழகை சுற்றுலா பயணிகள் ரசிப்பதுடன், புகைப்படங்களை எடுத்து செல்வர். எனவே, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கூடலூரில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்க இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தினர். 



பூங்கா

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தோவலா அரசு தோட்டக்கலைப் பண்ணையில் மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சத்தில் வண்ணத்துப்பூச்சி பூங்கா உருவாக்கப்பட்டது. இப்பூங்காவை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2015-ம் ஆண்டு திறந்து வைத்தார்.

இப்பூங்காவுக்காக 0.25 ஏக்கரில் பசுமை குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வண்ணத்துப்பூச்சிகளின் உணவு மற்றும் இனப்பெருக்கம், முட்டையிடுதல் ஆகியவற்றிற்கான மலர் செடிகள் வளர்க்கப்பட்டு சீரான வெப்பநிலையும் குடிலில் ஏற்படுத்தப்பட்டுள்ளது . 

பிடித்த செடிகள் 

வண்ணத்துப்பூச்சிகள் தும்பை, சங்கு வகைகளை சார்ந்த செடிகளை அதிகளவில் நாடி வருகின்றன. இதையறிந்து கூடலூர் ஜீன்பூல் தாவர மையத்தில், சோதனை முறையில் குரோடோலேரியா லாஞ்டெஸ் செடிகளை வளர்க்கப்படுகின்றன. சீசன் காலத்தில் இந்த செடிகளில் கூட்டம் கூட்டமாக வண்ணத்துப்பூச்சிகளைக் காண முடியும். 

இதனால், இந்த செடிகள் பூங்காவில் வளர்க்கப்படுகின்றன. 

இது தொடர்பாக, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் கூறுகையில், "தேவாலா தோட்டக்கலை பண்ணையில் ஆண்டு முழுதும் வண்ணத்துப்பூச்சி வரவழைக்கும் வகையிலும், சுற்றுலா பணிகளை கவரும் வகையிலும் இப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 

வண்ணத்துப்பூச்சிகளைக் கவர குரோடோலேரியா லாஞ்டெஸ் உட்பட 12 வகையாக செடிகள் வளர்க்கப்படுகின்றன. சீசன் காலத்தில் வண்ணத்துப்பூச்சி இந்த செடிகளில் முட்டையிட்டு, அவை வளர்ந்து வண்ணத்துப்பூச்சிகளாக இடம் பெயர்ந்து செல்கின்றன. இந்த பூங்காவை சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபலப்படுத்தும் வகையில், நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. 

 

மேலும், பண்ணையில் தேயிலை, சில்வர் ஓக், பாக்கு, குருமிளகு, ஜாதிக்காய், கிராம்பு நாற்றுகள் மலிவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் இந்தப் பூங்கா பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...