சூலூரில் உள்ள அரசு கருவூலத்தில் குரூப் 4 தேர்வு வினாத்தாள்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகப் புகார் எழுந்துள்ளது.
கோவை: சூலூரில் உள்ள அரசு கருவூலத்தில் குரூப் 4 தேர்வு வினாத்தாள்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகப் புகார் எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் நாளை குரூப் - 4 தேர்வு நடைபெற உள்ளது. கோவை மாவட்டம் சூலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மட்டும் 17 ஆயிரம் பேர் இந்தத் தேர்வில் பங்கேற்க உள்ளனர். அந்த பகுதியில் 11 தேர்வு மையங்களில் நடைபெற இருக்கும் இந்த தேர்வுக்கு நேற்று மாலை வினாத்தாள்கள் சூலூர் வந்தடைந்தன. அந்த வினாத்தாள்கள் அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டன. 6 மணிக்கு கருவூலத்தில் வைக்கப்பட்ட வினாத்தாள்கள் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்ததாகப் புகார் எழுந்தது. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என்றும், இதனால் வினாத்தாள்கள் சேதப்படுத்தப் படுத்தப்படுவதற்கோ, அல்லது திருடு போவதற்கோ வாய்ப்பு இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாடினர்.
இந்த நிலையில், வினாத்தாள்களுக்கு முறையாகப் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று கூறி சூலூர் வட்டாட்சியர் பக்தவச்சலம் அந்த பகுதி காவல் நிலையத்திற்கு நேரில் வந்து ஆய்வாளர் தங்கராஜிடம் புகார் கூறினார். இதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் நாளை குரூப் - 4 தேர்வு நடைபெற உள்ளது. கோவை மாவட்டம் சூலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மட்டும் 17 ஆயிரம் பேர் இந்தத் தேர்வில் பங்கேற்க உள்ளனர். அந்த பகுதியில் 11 தேர்வு மையங்களில் நடைபெற இருக்கும் இந்த தேர்வுக்கு நேற்று மாலை வினாத்தாள்கள் சூலூர் வந்தடைந்தன. அந்த வினாத்தாள்கள் அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டன. 6 மணிக்கு கருவூலத்தில் வைக்கப்பட்ட வினாத்தாள்கள் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்ததாகப் புகார் எழுந்தது. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என்றும், இதனால் வினாத்தாள்கள் சேதப்படுத்தப் படுத்தப்படுவதற்கோ, அல்லது திருடு போவதற்கோ வாய்ப்பு இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாடினர்.
இந்த நிலையில், வினாத்தாள்களுக்கு முறையாகப் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று கூறி சூலூர் வட்டாட்சியர் பக்தவச்சலம் அந்த பகுதி காவல் நிலையத்திற்கு நேரில் வந்து ஆய்வாளர் தங்கராஜிடம் புகார் கூறினார். இதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.