மத்திய அரசைக் கண்டித்து பக்கோடா விற்ற காங்கிரஸ் கட்சியினர்

கோவையில் மத்திய அரசைக் கண்டித்து கருப்பு அங்கி அணிந்து, காங்கிரஸ் கட்சியினர் பக்கோடா விற்பனை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : கோவையில் மத்திய அரசைக் கண்டித்து கருப்பு அங்கி அணிந்து, காங்கிரஸ் கட்சியினர் பக்கோடா விற்பனை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



வேலையே இல்லாமல் இருப்பதை விட பக்கோடா விற்பதும் ஒரு வேலைதான் என்று மாநிலங்களவையில் பா.ஜ.க., தேசிய தலைவர் அமித்ஷா தனது பேச்சில் குறிப்பிட்டிருந்தார். இதேபோல, பிரதமர் மோடி சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஒரு நபர் பக்கோடா விற்றால் தினமும் வீட்டுக்கு அன்று மாலை ரூ. 200 எடுத்துச் செல்கிறார் எனவும், அப்படியானால் அதுவேலை என்று எடுத்துக்கொள்ளப்படுமா..? இல்லை..? என்று பதில் கேள்வி எழுப்பினார். பிரதமரின் இந்தக் கருத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. 



இதன் ஒருபகுதியாக கோவை காந்திபுரம் நகர் பேருந்துநிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசைக் கண்டித்து பட்டதாரிகள் அணியும் கருப்பு அங்கி அணிந்து பக்கோடா விற்பனை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலைவாய்ப்பை உருவாக்காமல், பட்டதாரி இளைஞர்களை பக்கோடா போடச் சொல்லிய பிரதமர் மோடியைக் கண்டித்து 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கோஷமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடியைக் கண்டித்து பதாகைகள் ஏந்தியவாறு, பக்கோடாவை சாலையில் சென்றவர்களுக்கு வழங்கினர். இதனையடுத்து, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் மயூரா ஜெயக்குமார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் போலீசார் கைது செய்தனர். 

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...