வாய்க்கால் நீரில் அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவன் : உடலை தேடும் பணி தீவிரம்

திருப்பூர் அருகே வாய்க்கால் நீரில் அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவனைத் தேடும் பணியில் போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் : திருப்பூர் அருகே வாய்க்கால் நீரில் அடித்து செல்லப்பட்ட பள்ளி மாணவனைத் தேடும் பணியில் போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். 



பொங்கலூரை அடுத்த தொட்டம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் விஜயன். கூலி தொழிலாளியான இவருக்கு தர்ணீஸ் என்கிற மகனும், மகளும் உள்ளனர். மேலும், தர்ணீஸ் அங்குள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்துவரும் நிலையில், இன்று பள்ளிக்கு செல்லாமல் மதியம் சுமார் 1 மணி அளவில் அருகில் உள்ள பி.ஏ.பி வாய்க்காலில் தனது தாத்தா முருகனுடன் குளிக்க சென்றதாகத் தெரிகிறது. இதனைக் கரை ஓரம் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மாணவன் திடீரென தவறி வாய்க்கால் தண்ணீரில் விழுந்துள்ளான். 

இதனைக் கண்ட அவனது தாத்தா முருகன் அதிர்ச்சி அடைந்து தர்ணீஸை காப்பாற்ற முயன்ற போது, நீரின் வேகத்தால் அடித்து செல்லப்பட்டான். பின்னர், இது குறித்து உறவினர்களுக்கும் தீயணைப்பு மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை மற்றும் போலீஸார் பொதுமக்கள் துணையோடு தர்ணீஸின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 10 கிலோமீட்டர் அளவிற்குத் தேடியும் கிடைக்காததால் தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. அரசு பள்ளி மாணவன் வாய்க்காலில் தவறி விழுந்து மூழ்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...