காவல் ஆய்வாளர்களின் ஜீப்பில் ஜி.பி.எஸ்., வசதியுடன் கூடிய செல்போன்கள் பொருத்தம்

திருப்பூரில் குற்றம் நடக்கும் இடங்களுக்கு போலீசார் விரைந்து செல்வதை கண்காணிக்கும் வகையில், ஜி.பி.எஸ்., வசதியுடன் கூடிய செல்போன்கள் காவல் ஆய்வாளர்கள் ஜீப்பில் பொருத்தப்பட்டது.

திருப்பூர் : திருப்பூரில் குற்றம் நடக்கும் இடங்களுக்கு போலீசார் விரைந்து செல்வதை கண்காணிக்கும் வகையில், ஜி.பி.எஸ்., வசதியுடன் கூடிய செல்போன்கள் காவல் ஆய்வாளர்கள் ஜீப்பில் பொருத்தப்பட்டது.

108 ஆம்புலன்ஸை போலவே தமிழகம் முழுவதும் குற்ற சம்பவங்கள் குறித்து தெரிவிக்க சென்னையை தலைமையிடமாகக் கொண்ட கட்டுப்பாட்டு அறை உருவாக உள்ளது. குற்ற சம்பவங்கள் குறித்த தகவல்களை சம்பந்தபட்ட காவல் நிலையங்களுக்கு தெரிவிக்கவும், குற்றம் நடந்த இடத்திற்கு போலீஸார் எவ்வித தடையுமின்றி விரைவாகச் செல்வதை கண்காணிக்கும் வகையில், ஜி.பி.எஸ்., வசதியுடன் கூடிய செல்போன்கள் அனைத்து காவல்நிலைய ஆய்வாளர்களின் ஜீப்களில் பொருத்தும் பணி நடந்து வருகிறது.

இதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகர மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து காவல்நிலைய ஆய்வாளர்களின் ஜீப்பில் அதற்கென உருவாக்கப்பட்ட செயலியுடன் கூடிய இந்த ஜி.பி.எஸ்., செல்போன் பொருத்தப்பட்டது. திருப்பூர் மாநகர பிரிவில் 10 ஜீப்களுக்கும், திருப்பூர் மாவட்ட பிரிவில் 15 ஜீப்களுக்கும் பொருத்தப்பட்டுள்ளது

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...