தற்காலிக புள்ளிவிவர ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் தற்காலிக புள்ளிவிவர ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை : கோவையில் தற்காலிக புள்ளிவிவர ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:- 

கோவை மாவட்ட புள்ளியியல் துணை இயக்குநர் அலுவலகத்தில் புதியதாக தற்காலிகமாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ள 3 புள்ளிவிவர ஒருங்கிணைப்பாளர்  பதவிக்கு 01.07.2017 அன்றைய நிலையில் 35 வயதிற்கு மிகாமலும், ஏதாவது ஒரு பட்டம் மற்றும் கணிப்பொறியில் சான்று (பட்டயப்படிப்பு) பெற்றிருப்பவரும் அரசு நியமனத்தில் பின்பற்றப்படும் இனசுழற்சி முறையைப் பின்பற்றி பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையிலிருந்து வழங்கப்படும் கேள்வித்தாள் வைத்துத் தேர்வு நடத்தி நேர்காணல் வைத்துத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 

நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் ஒன்றுக்குத் தொகுப்பு ஊதியமாக ரூ.15000 மட்டும் வழங்கப்படும். இதரபடிகள் ஏதும் வழங்கப்படமாட்டாது.  மேற்கண்ட தகுதிகளை உடைய தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து 22.02.2018 மாலை 05.45மணி வரை “புள்ளியியல் துணை இயக்குநர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பழைய கட்டிடம், முதல் தளம், கோயம்புத்தூர். 641018” (தொலைபேசி எண் 0422-2309685) என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் அனுப்பிவைக்க வேண்டப்படுகிறது.

தேர்வு நடைபெறும் விவரம் தகுதியுள்ள நபர்களுக்கு தனித்தனியாக அழைப்புகடிதம் அனுப்பிவைக்கப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.  காலங்கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...