பள்ளத்தில் கவிழ்ந்த லாரியை மீட்பதில் மெத்தனம் : பொதுமக்கள் அவதி

நீலகிரி மாவட்டம் கேத்தி செல்லும் வழியில் பள்ளத்தில் கவிழ்ந்த லாரியை மீட்பதில் ஊழியர்கள் தாமதம் செய்தனர். இதனால், சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக வாகன ஓட்டிகள் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டதால் பெரும் அவதிக்குள்ளாகினர்.


நீலகிரி : நீலகிரியில் பள்ளத்தில் கவிழ்ந்த லாரியை மீட்பதில் ஊழியர்கள் செய்த தாமதத்தினால், சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.



ஊட்டியில் இருந்து கேத்தி செல்லும் வழியில் கேத்தி சாட்கட் அருகே சென்று கொண்டிருந்த லாரி கடந்த 31-ம் தேதி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், லாரியின் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.  பள்ளத்தில் விழுந்த லாரியை ஒருவாரத்திற்கும் மேலாக அப்புறப்படுத்தாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், இன்று எந்தவித முன்னறிவிப்புமின்றி லாரியை மீட்கும் பணி தொடங்கப்பட்டது. 

இந்த மீட்பு பணி காரணமாக அதிகாலை முதலே வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், வேலைக்குச் செல்பவர்கள், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்பவர்கள் சாலைகளில் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதன் காரணமாக குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனிடையே, ஒருசில வாகன ஓட்டிகள் எல்லநள்ளியில் இருந்து கேத்தி அச்சனக்கல் வழியாக ஊட்டி வருவதற்குப் பயணிகளிடம் 150 ரூபாய் வசூல் செய்துள்ளனர். பலர் குன்னூரில் இருந்து கட்டபெட்டு சென்று 30 கிலோ மீட்டர் சுற்றி ஊட்டிக்கு வந்தனர். 

இதுமாதிரியான மீட்பு பணிகள் மேற்கொள்ளும் முன் நாளிதழ்களுக்குச் செய்தியோ அல்லது உள்ளுர் தொலைக்காட்சிகளில் முன்னறிவிப்போ செய்து மீட்பு பணி செய்திருந்தால், வாகன ஓட்டிகளும் இவ்வாறு அவதிப்படாமல், முன்னேற்பாடுகள் செய்திருப்பார்கள் என சிலர் வேதனை தெரிவித்துள்ளனர். 

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...