பல்லடத்தில் முள்காட்டில் பயங்கர தீவிபத்து : போலீஸார் விசாரணை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே முள்காட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏராளமான மரங்கள் எரிந்து சேதமடைந்தன.

பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே முள்காட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏராளமான மரங்கள் எரிந்து சேதமடைந்தன. 

பல்லடம் மங்கலம் சாலை தெற்குப்பாளையம் பிரிவு அருகே திருப்பூரைச் சேர்ந்தவர் முத்துச்சாமி (58). இவருக்குச் சொந்தமான 8 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில், கடும் வறட்சி காரணமாக விவசாயம் ஏதும் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால், விவசாய நிலத்தைச் சுற்றிலும் ஏராளமான மரங்கள், முட்கள் முளைத்து புதர்போல் மண்டியுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென அந்தக் காட்டில் தீ மளமளவெனப் பற்றி எரிந்தது. இதில், சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏராளமான முள் மரங்கள், புற்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.



இது குறித்து அப்பகுதியினர் பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அங்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...