துணைவேந்தர் திறமையின் அடிப்படையில் நியமிக்கப்படவில்லை - துரைமுருகன்

துணைவேந்தர் திறமையின் அடிப்படையிலோ அல்லது கல்வியின் அடிப்படையிலோ நியமிக்கப்படவில்லை என்று தி.மு.க., முதன்மை செயலாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை: துணைவேந்தர் திறமையின் அடிப்படையிலோ அல்லது கல்வியின் அடிப்படையிலோ நியமிக்கப்படவில்லை என்று தி.மு.க., முதன்மை செயலாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரோட்டில் நடைபெற உள்ள திமுக மண்டல மாநாட்டு பணிகளை பார்வையிடச் சென்னையிலிருந்து விமானம் மூலம் தி.மு.க., முதன்மை செயலாளர் துரைமுருகன் கோவை வந்தார். 

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், " காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது. சாகப்போகும் நிலையில் சங்கரா என கூறுவதைப்போல, பயிர்கள் காய்ந்து விட்ட இந்த நிலையில் கர்நாடகா முதல்வரை சந்திக்க உள்ளதாக கூறுகின்றார்கள். கர்நாடகா முதல்வர் தேர்தலில் முனைப்புடன் உள்ளார். இப்போது அவரை பார்க்க நினைப்பதை முன்னரே செய்திருக்க வேண்டும். மேட்டூர் அணையில் தற்போது எவ்வளவு நீர் இருப்பு உள்ளது காவிரி டெல்டா பகுதியில் ஏக்கருக்கு எவ்வளவு டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது? என அரசுக்கு தெரியுமா.?

ஆண்டாள் தொடர்பாக கருத்து தெரிவித்த பிரச்சனையில் வைரமுத்து பெருந்தன்மையோடு மன்னிப்பு கேட்டு விட்டார். இருப்பினும் ஜீயர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்றுதான் கூற முடியும். லஞ்சம் பெற்ற வழக்கில் பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கைது செய்யப்பட்டுள்ளார். துணைவேந்தர் திறமையின் அடிப்படையிலோ, கல்வியின் அடிப்படையிலோ நியமிக்கப்படவில்லை. பணம் சம்பாதிக்கும் குறிக்கோளோடு தான் வந்துள்ளனர்" என்றார்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...