தெர்மாகோலுக்கு செல்லூர் ராஜு, சோப்பு நுரைக்கு கருப்பண்ணன்., இப்போது, மக்கள் தொகைக்கு செங்கோட்டையன்..!

மக்கள் தொகை குறைந்து வருவதே அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவுக்குக் காரணம் என்று கூறி அமைச்சர்கள் செல்லூர் ராஜு, கே.சி. கருப்பண்ணன் வரிசையில் இடம்பிடித்துள்ளார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

மக்கள் தொகை குறைந்து வருவதே அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவுக்குக் காரணம் என்று கூறி அமைச்சர்கள் செல்லூர் ராஜு, கே.சி. கருப்பண்ணன் வரிசையில் இடம்பிடித்துள்ளார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். 

தேக்கி வைக்கப்பட்ட நீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மாகோல்களை பயன்படுத்தும் மாபெரும் திட்டத்தால் பிரபலமானவர் அமைச்சர் செல்லூர் ராஜு. " கோவை மக்கள் சோப்பு போட்டுக் குளிப்பதால் தான் நொய்யல் ஆற்றில் நுரை பொங்கி வருகிறது" என்று கூறி அனைவரையும் மூக்கின் மீது விரல் வைக்கவைத்துப் பிரபலமடைந்தவர் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன். 

மக்கள் நலப்பணிகள் செய்து பிரபலமான அமைச்சர்களைக் காட்டிலும், இது போன்று வேடிக்கையான கருத்துக்களாலும், திட்டங்களாலும் பிரபலமான அமைச்சர்களே அதிகம். அந்த வரிசையில் தற்போது தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் இடம் பிடித்துள்ளார். 

வரும் மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் தொடங்க இருப்பதைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார் அமைச்சர் செங்கோட்டையன். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், " இந்தாண்டு 8 லட்சத்து 67 ஆயிரம் மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வும், 8 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காகக் கூடுதலாக 500-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் 'காப்பி' அடிப்பதைத் தடுக்க தேர்வு மையங்களில் பறக்கும்படை மற்றும் கூடுதல் ஆசிரியர்கள் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். " என்றார். 

தொடர்ந்து, அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவதற்கான காரணம் என்ன? என்ற கேள்வியை செய்தியாளர்கள் அமைச்சரிடம் கேட்டனர். அதற்கு, " மக்கள் தொகை குறைந்து வருவதே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கான காரணம் " என்று அடேங்கப்பா பதிலை கொடுத்துள்ளார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர். 

அடுத்தடுத்து செய்தியாளர்கள் கேள்விக்கணைகளைத் தொடுக்க, சுதாரித்துக் கொண்ட அமைச்சர், " வரும் கால கட்டங்களில் அரசுப் பள்ளிகளின் தரம் மற்றும் கல்வித்தரம் மேம்படும். அப்போது அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் " என்று கூறி எஸ்கேப் ஆனார். 

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...