சிகிச்சைக்கு வந்த சிறுவனை தாக்கியதாக மருத்துவர் மீது போலீஸில் புகார்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்த சிறுவனை, மருத்துவர் தாக்கியதாக பெற்றோர்கள் பந்தய சாலை போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்த சிறுவனை, மருத்துவர் தாக்கியதாக பெற்றோர்கள் பந்தய சாலை போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

குறிச்சி பகுதியைச் சேர்ந்த அம்சவேணியின் மகன் சரண். இவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட போது மருத்துவர்களால் தாக்கப்பட்டதாகவும், தகாத வார்த்தைகளால் மருத்துவர்கள் பேசியதாகவும் அவரது தாயார் அம்சவேணி பந்தயசாலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, புகாரை பெற்றுக் கொண்ட போலீஸார், மருத்துவமனை உயர்அதிகாரிகளிடம் பேசி தகாத வார்த்தைகளால் பேசிய மருத்துவரை தண்டிப்பதாக கூறி புகார்தாரர் அம்சவேணியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

இதனையடுத்து, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலரிடம் சிறுவனின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட மருத்துவரை விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக மருத்துவ அலுவலர் தெரிவித்தார். 

இது குறித்து சிறுவனின் தாயார் கூறும்போது, நோயாளிகளிடம் இரக்கம் காட்டவேண்டிய மருத்துவர்கள் இதுபோல் நடந்தது ஏற்புடையதல்ல. சிகிச்சைக்காக வந்த என் மகனை தகாத வார்த்தையில் பேசி அடித்த மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் குடும்பத்தோடு மருத்துவமனை முன்பு தற்கொலை செய்து கொள்வோம். என்றார்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...