திருப்பூரில் ரயில் மோதி அடையாளம் தெரியாத நபர் பலி

திருப்பூர் மாவட்டத்தில் ரயில் மோதியதில் அடையாளம் தெரியாத நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் ரயில் மோதியதில் அடையாளம் தெரியாத நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 



திருப்பூர் ரயில் நிலையம் அருகே கல்லூரி சாலையில் உள்ள தண்டவாளத்தில் ஆண் சடலம் கிடப்பதாக ரயில்வே ஊழியர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, அங்கு வந்த ரயில்வே போலீஸார் சிதைந்த நிலையில், இருந்த ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவரை அடையாளம் காணும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்தவரா..? தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதி விபத்து நடந்ததா..? அல்லது கொலையா..? தற்கொலையா..? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...