கோவை மாநகர போலீசாருக்கும் வழங்கப்பட்டது 'பாடி ஒன் காமிரா'

கேரள மாநிலம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்பட்டதைப் போன்ற 'பாடி ஒன்' காமிரா கோவை மாநகர போலீசாருக்கும் வழங்கப்பட்டது.

கோவை : கேரள மாநிலம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்பட்டதைப் போன்ற 'பாடி ஒன்' காமிரா கோவை மாநகர போலீசாருக்கும் வழங்கப்பட்டது.  



போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களைப் பிடித்து அவர்களிடம் அபராதம் வசூலிப்பது போலீசாரின் வழக்கமான பணி. 

அவ்வாறு அதிக தொகையை அபராதமாக செலுத்த வேண்டிய சூழலில், ஒரு குறிப்பிட்ட தொகையை போலீசாரின் கைகளில் லஞ்சமாகத் திணித்து 'எஸ்கேப்' ஆவதும் சிலரின் வழக்கமான குணம் தான். 

இந்த சூழலில், போலீசார் லஞ்சம் வாங்குவதை தடுக்கும் விதமாகவும், போக்குவரத்தை சீரமைக்கும் பணியின் போது போலீசாருக்கு இடையூறு ஏற்படுத்தும் மர்ம நபர்களை அடையாளம் காணவும் கேரள மாநில போலீசாருக்கு 'பாடி ஒன் காமிரா' (Body Worn Camera) வழங்கப்பட்டது.

அளவில் சிறியதாக இருக்கும் இந்த காமிரா போலீசாரின் சீருடையில் பொருத்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பதிவாகும் காட்சிகள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள காவல் கட்டுப்பாட்டு  அறைகளுக்கு அனுப்பப்படும்.

அந்தந்த காவல் கட்டுப்பாட்டு அறையில் பதிவிறக்கம் செய்யாமல் காமிராவில் பதிவான காட்சிகளை போலீசாரால் அழிக்க முடியாது. 

போலீசாரை கண்காணிக்கும் இந்த திட்டம் கேரள மாநிலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

தமிழகத்திலும் இது போன்ற காமிராக்களை போக்குவரத்து போலீசாருக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், சமீபத்தில்  நெல்லை மாவட்ட போலீசார் 'பாடி ஒன் காமிரா'வை உபயோகிக்கத் தொடங்கினர்.

கோவை மாநகர போலீசாருக்கும் இந்த காமிராக்கள் வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்ததைத் தொடர்ந்து டிரையல் அடிப்படையில் போக்குவரத்து போலீசாருக்கு இந்த காமிரா வழங்கப்பட்டுள்ளது. 

இது குறித்து மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சுஜித்குமார் கூறுகையில், " 'டிரையல்' (Trial) அடிப்படையில் ஒரே ஒரு 'பாடி ஒன் காமிரா'  வரவழைக்கப்பட்டு மாநகரில் போக்குவரத்து உதவி ஆய்வாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இதற்கான வரவேற்பு மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில் மற்ற போலீசாருக்கும் இந்த காமிரா வழங்கப்படும்" என்றார்.

நாளை முதல் செயல்பட இருக்கும் இந்த காமிராவுக்கு கோவை மாநகர மக்கள் எவ்விதமான வரவேற்பை தருகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...