சாலையோர வியாபாரிகளுக்கு விரைவில் அனுமதி சான்றிதழ் : உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தகவல்

சாலையோர வியாபாரிகளுக்கு விரைவில் அனுமதி சான்றிதழ் வழங்கப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

கோவை : சாலையோர வியாபாரிகளுக்கு விரைவில் அனுமதி சான்றிதழ் வழங்கப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. 



கணபதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் தமிழ்நாடு சாலையோர திருவிழா வியாபாரிகள் சங்கம், கோவை மாவட்ட தலைவர் தேவராஜ் பேசுகையில், தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாநில ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. திருவிழா காலங்களில் உணவு உட்பட பல்வேறு பொருட்களை தற்காலிக கடைகள் அமைத்து விற்பனை செய்யும் போது உள்ள நெருக்கடிகள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. உணவு தர சான்றிதழ் உட்பட அரசின் அனுமதி எளிமையாகக் கிடைக்க வழி காணவேண்டிய தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உணவு பாதுகாப்பு துறையின் நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை சிறப்பு முகாம்கள் அமைத்து அங்கீகார சான்றிதழ்கள் வழங்க ஆவண மேற்கொள்ளப்படும் எனக் கூறியுள்ளார். அது, தங்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...