அ.தி.மு.க. அரசு என்றும் தொழிலாளர் பக்கம் தான் இருக்கும் -அமைச்சர் தங்கமணி

அ.தி.மு.க. அரசு என்றும் தொழிலாளர் பக்கம் தான் இருக்கும் என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

கோவை: அ.தி.மு.க. அரசு என்றும் தொழிலாளர் பக்கம் தான் இருக்கும் என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

தமிழ்நாடு மின்வாரியத்தின் சார்பாக 42 வது தேசிய மின்வாரியங்களுக்கு இடையேயான 

கூடைப்பந்தாட்ட போட்டி கோவை பீளமேட்டு பகுதியில் உள்ள தனியார் உள்விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. கடந்த 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில் கேரளா மின்வாரிய அணி முதலிடமும், தமிழ்நாடு மின்வாரிய அணி இரண்டாமிடமும், பஞ்சாப் அணி மூன்றாமிடமும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு மின்வாரியம் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் பரிசுகளை வழங்கினர். 

இதனைத் தொடர்ந்து அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் பேசியதாவது :- 

மின்வாரிய பணியாளர்களின் சம்பள பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றது. அ.தி.மு.க. அரசு என்றும் தொழிலாளர் பக்கம்தான் இருக்கும். மேலும் சி.ஐ.டி.யூ மற்றும் பி.எம்.எஸ் போன்ற தொழிலாளர் அமைப்புகள் பேச்சு வார்த்தைக்கு வரச்சொல்லியும் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளனர். பேச்சு வார்த்தை முடியாத நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது உள்நோக்கம் கொண்டதாக உள்ளது. 

காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. தற்போதுள்ள வழித்தடம் மூலம் 150 மெகா வாட் வழங்கப்பட்டு வருகிறது. புதிய வழித்தடம் ஏற்படுத்தப்பட்டு 500 மெகா வாட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

மேலும், உதய் மின் திட்டத்தில் இணைந்த பிறகு 13 ஆயிரம் கோடி இருந்த கடன் தற்போது 4000 கோடியாகக் குறைந்துள்ளது. இந்த ஆண்டில் கடன் தொகை மேலும் குறைக்கப்படும். நிலக்கரி இறக்குமதிக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளில் தேவையானவற்றை மத்திய அரசே கொடுத்துள்ளது. தற்போது நிலக்கரி உற்பத்தி மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதால், அதை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...