திருப்பூரில் அடுத்தடுத்து நிகழும் தீ விபத்துகள்: சிலிண்டர் வெடித்து 8 குடிசைகள் எரிந்து சேதம்


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலை அருகே சிலிண்டர் வெடித்ததில் எட்டு குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தன.



ஊத்துக்குளி சாலையிலுள்ள வாய்க்கால் மேடு பகுதியில் ராமசாமி என்பவர்களுக்கு சொந்தமான எட்டு குடிசை வீடுகள் உள்ளன. இன்று மாலை வீட்டிலுள்ள அனைவரும் வேலைக்கு சென்றிருந்த வேளையில், வீட்டிலிருந்த குழந்தைகள் கியாஸ் அடுப்பைப் பற்ற வைத்து விட்டு வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது, எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்துள்ளது. இதன் காரணமாக அடுத்தடுத்த வீடுகளில் தீப்பிடித்து அங்கிருந்த சிலிண்டர்களும் வெடித்துள்ளன. இதனால், எட்டு குடிசை வீடுகளும் முற்றிலும் தீக்கிரையானது.



இதனையடுத்து, தகவலறிந்து மூன்று வண்டிகளில் வந்த தீயணைப்பு துறையினர் அரைமணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தின் காரணமாக 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் வீட்டிலிருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து தீக்கிரையானது. பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளது. இந்த விபத்து குறித்து திருப்பூர் வடக்கு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...