மத்திய பட்ஜெட் அலங்கார அறிவிப்புகளின் தொகுப்பு : ஸ்டாலின் குற்றச்சாட்டு

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள பட்ஜெட் அலங்கார அறிவிப்புகளின் தொகுப்பாக மட்டுமே உள்ளது என தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள பட்ஜெட் அலங்கார அறிவிப்புகளின் தொகுப்பாக மட்டுமே உள்ளது என தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். விவசாயிகளுக்கு உற்பத்தி விலையில் இருந்து ஒன்றரை மடங்கு லாபம் கிடைக்கும் எனவும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு நிறைவேற்றியுள்ள பட்ஜெட் அலங்கார அறிவிப்புகளின் தொகுப்பாக மட்டுமே உள்ளதாக தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு நிறைவேற்றியுள்ள பட்ஜெட் அலங்கார அறிவிப்புகளின் தொகுப்பாக மட்டுமே காணப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் தமிழக மக்களின் நலன் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய ரயில்வே திட்டங்கள், நதிநீர் இணைப்புத் திட்டங்கள் மற்றும் ஒகி புயல் பேரிடர் நிவாரண நிதிகள் குறித்து எந்த அறிவிப்புகளும் இல்லை. வருமான வரி உச்சவரம்பு உயர்வு மற்றும் வீட்டுக்கடன் வட்டி விலக்கு உயர்வு போன்ற எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை.

மேலும், மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க. அரசு 2014 நாடாளுமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் என்ன..? அப்போது வெளியிட்ட அறிவிப்புகள் என்ன..? எனவே, பா.ஜ.க. அரசு ஒருமுறை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...