தாய்மாமனைக் கொலை செய்த வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை

தாய்மாமனைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து கோவை 4-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை, ஜனவரி 29

தாய்மாமனைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து கோவை 4-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம், கோவில்பாளையம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட கள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது தாய்மாமன் நடராஜன் வீட்டில் வசித்து வந்துள்ளார். வேலைக்கு ஏதும் செல்லாமல் வெட்டியாக சுற்றித் திரிந்த சிவகுமார் போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்.

இவரது தாய்மாமனான நடராஜன், கூலி வேலைக்குச் செல்பவர். அவ்வப்போது சிவக்குமாருக்கு செலவு செய்ய பணம் கொடுத்து வந்த நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு மது அருந்த பணம் தராததால் தாய்மாமனான நடராஜனை அம்மிக் கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று தீர்ப்பு வழங்கிய கோவை 4-வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி விஜயா, சிவகுமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...