ஜல்லிக்கட்டு போராட்டக் கலவரம் தொடர்பாக வரும் 31-ம் தேதி கோவையில் 3-வது கட்ட விசாரணை

கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக கோவையில் வரும் 31-ம் தேதி 3-வது கட்ட விசாரணையைத் தொடங்க இருப்பதாக விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

கோவை, ஜனவரி 25

கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக கோவையில் வரும் 31-ம் தேதி 3-வது கட்ட விசாரணையைத் தொடங்க இருப்பதாக விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின் இறுதி நாள் கலவரத்தில் முடிந்தது. இதுகுறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் கலவரம் தொடர்பாக, பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்தவர்களிடம் கோவை, சென்னை, மதுரை ஆகிய மாவட்டங்களில் விசாரணை நடத்தப்பட்டது.

நீதியரசர் எஸ். ராஜேஸ்வரனுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால், ஜல்லிக்கட்டு போராட்டக் கலவரம் தொடர்பான விசாரணை சிறிது நாட்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வரும் 31-ம்தேதி முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரையில் 3-ம் கட்ட விசாரணையை நடத்த இருப்பதாக விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த விசாரணை கோவை அரசு விருந்தினர் மாளிகையில் நடக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...