மானை வேட்டையாடிய இருவர் வனத்துறையினரால் கைது

கோவை மாவட்டத்திற்குட்டபட்ட வனப்பகுதியில் சட்டவிரோதமாக மானை வேட்டையாடிய இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கோவை, ஜனவரி 20

கோவை மாவட்டத்திற்குட்டபட்ட வனப்பகுதியில் சட்டவிரோதமாக மானை வேட்டையாடிய இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்தனர். 

தடாகம் வனப்பகுதிக்குட்பட்ட பகுதியில் மர்மநபர்கள் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக பெரியநாயக்கன்பாளையம் வனத்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற அதிகாரிகள், மானை வேட்டையாடி, பையில் எடுத்துச் சென்ற இரண்டு பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தோலாம்பாளையத்தைச் சேர்ந்த சி. முருகேசன் (35), வெள்ளியங்காட்டைச் சேர்ந்த ஆர். ராதாகிருஷ்ணன் (32) என்பது தெரியவந்தது. 

வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இருவர் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், அவர்களிடம் இருந்து 5.5 கிலோ இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டது. 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...