பேருந்து கட்டண உயர்வுக்கு தி.மு.க.,வே காரணம்: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றச்சாட்டு

தி.மு.க., ஆட்சி காலத்தில் வைக்கப்பட்ட நிலுவை தொகையை போக்குவரத்து பணியாளர்களுக்கு கொடுக்கவே பேருந்து கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை, ஜனவரி 20

தி.மு.க., ஆட்சி காலத்தில் வைக்கப்பட்ட நிலுவை தொகையை போக்குவரத்து பணியாளர்களுக்கு கொடுக்கவே பேருந்து கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் வையம்பாளையத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவிற்கு ரூ. 1.17 கோடி மதிப்பில் மணிமண்டபம் கட்டும் பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.



பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், விவசாயிகளின் கடந்த முப்பது ஆண்டுகால கோரிக்கையான நாராயணசாமி நாயுடுவுக்கு மணி மண்டபம் அமைப்பதற்கான கோரிக்கையை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இந்த நிலையில், அதனை முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அரசு நிறைவேற்றி, அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நிறைவேற்றி வருவதற்கு உதாரணம். மேலும், பூங்கா உள்ளிட்ட வசதிகளுடன் 6 மாத காலத்தில் நாரயணசாமி நாயுடு மணி மண்டபம் கட்டி முடிக்கப்படும். 

தி.மு.க,. ஆட்சியில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களின் நிதி வேறு ஒரு திட்டத்தில் பயன்படுத்தப்பட்டதால், இதுவரை ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலுவை தொகை கொடுக்க முடியாமல் உள்ளது. தி.மு.க., ஆட்சி காலத்தில் வைத்து போன நிலுவை தொகையை, போக்குவரத்து பணியாளர்களுக்கு கொடுக்கவே கட்டண உயர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு மற்ற மாநிலங்களை விடக் குறைவு. என்றார். 

இதனையடுத்து, வையம்பாளையம் பகுதியில் 1.80 ஆயிரம் செலவில் தார் சாலை அமைக்கும் பணியையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...