அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர் பெயரில் போலி மருந்து சீட்டு தயாரித்து, போதை மருந்து வாங்க முயன்ற மூன்று பேரை கோவை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை, ஜனவரி 20
அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர் பெயரில் போலி மருந்து சீட்டு தயாரித்து, போதை மருந்து வாங்க முயன்ற மூன்று பேரை கோவை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள பிரபல மருந்துக்கடை ஒன்றிற்கு சென்ற மூன்று வாலிபர்கள், ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர் பாரஜரஜதாஸ் கையெழுத்து இடப்பட்ட மருந்து சீட்டை கொண்டு மாத்திரை வாங்க முற்பட்டனர். அந்த மருந்து சீட்டில், அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் போதை மருந்துகள் இடம்பெற்றிருந்தது.
அந்த மருந்து சீட்டில், அப்பல்லோ மருத்துவமனையின் பெயர், மருத்துவர் பெயர் மற்றும் கையெழுத்து இருந்தது. ஓடிசாவில் இருந்து இங்கு மருந்து வாங்கவேண்டியதன் அவசியம் என்ன..? என்று சந்தேகித்த மருந்துக்கடை ஊழியர்கள், இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த மூன்று வாலிபர்களையும் பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர்கள், ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் (19), ஜவஹர் (19) மற்றும் உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ்ராஜ் (19) என்பதும் தெரியவந்தது. மேலும், அவர்கள், போலி மருந்து சீட்டு மூலம் போதை மருந்துகளை பெற முயன்றதும் உறுதிப்படுத்தப்பட்டது.
இது தொடர்பாக, சம்மந்தப்பட்ட மருத்துவர் அளித்த புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்த சிங்காநல்லூர் போலீசார் மூன்று வாலிபர்களையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.
அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர் பெயரில் போலி மருந்து சீட்டு தயாரித்து, போதை மருந்து வாங்க முயன்ற மூன்று பேரை கோவை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள பிரபல மருந்துக்கடை ஒன்றிற்கு சென்ற மூன்று வாலிபர்கள், ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர் பாரஜரஜதாஸ் கையெழுத்து இடப்பட்ட மருந்து சீட்டை கொண்டு மாத்திரை வாங்க முற்பட்டனர். அந்த மருந்து சீட்டில், அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் போதை மருந்துகள் இடம்பெற்றிருந்தது.
அந்த மருந்து சீட்டில், அப்பல்லோ மருத்துவமனையின் பெயர், மருத்துவர் பெயர் மற்றும் கையெழுத்து இருந்தது. ஓடிசாவில் இருந்து இங்கு மருந்து வாங்கவேண்டியதன் அவசியம் என்ன..? என்று சந்தேகித்த மருந்துக்கடை ஊழியர்கள், இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த மூன்று வாலிபர்களையும் பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர்கள், ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் (19), ஜவஹர் (19) மற்றும் உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ்ராஜ் (19) என்பதும் தெரியவந்தது. மேலும், அவர்கள், போலி மருந்து சீட்டு மூலம் போதை மருந்துகளை பெற முயன்றதும் உறுதிப்படுத்தப்பட்டது.
இது தொடர்பாக, சம்மந்தப்பட்ட மருத்துவர் அளித்த புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்த சிங்காநல்லூர் போலீசார் மூன்று வாலிபர்களையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.