அப்பல்லோவின் போலி மருந்து சீட்டைத் தயாரித்த மூன்று பேர் கோவையில் கைது

அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர் பெயரில் போலி மருந்து சீட்டு தயாரித்து, போதை மருந்து வாங்க முயன்ற மூன்று பேரை கோவை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை, ஜனவரி 20

அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர் பெயரில் போலி மருந்து சீட்டு தயாரித்து, போதை மருந்து வாங்க முயன்ற மூன்று பேரை கோவை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர்.

ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள பிரபல மருந்துக்கடை ஒன்றிற்கு சென்ற மூன்று வாலிபர்கள், ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர் பாரஜரஜதாஸ் கையெழுத்து இடப்பட்ட மருந்து சீட்டை கொண்டு மாத்திரை வாங்க முற்பட்டனர். அந்த மருந்து சீட்டில், அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் போதை மருந்துகள் இடம்பெற்றிருந்தது.

அந்த மருந்து சீட்டில், அப்பல்லோ மருத்துவமனையின் பெயர், மருத்துவர் பெயர் மற்றும் கையெழுத்து இருந்தது. ஓடிசாவில் இருந்து இங்கு மருந்து வாங்கவேண்டியதன் அவசியம் என்ன..? என்று சந்தேகித்த மருந்துக்கடை ஊழியர்கள், இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த மூன்று வாலிபர்களையும் பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர்கள், ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் (19), ஜவஹர் (19) மற்றும் உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ்ராஜ் (19) என்பதும் தெரியவந்தது. மேலும், அவர்கள், போலி மருந்து சீட்டு மூலம் போதை மருந்துகளை பெற முயன்றதும் உறுதிப்படுத்தப்பட்டது.

இது தொடர்பாக, சம்மந்தப்பட்ட மருத்துவர் அளித்த புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்த சிங்காநல்லூர் போலீசார் மூன்று வாலிபர்களையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...