பேருந்து கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசு மீது பொதுமக்கள் அதிருப்தி

பேருந்து கட்டணத்தை உயர்த்தியிருப்பது பகல் கொள்ளை எனக் கூறிய பொதுமக்கள் , தமிழக அரசின் நடவடிக்கை மீது அதிருப்தி தெரிவித்தனர்.

கோவை, ஜனவரி 20

பேருந்து கட்டணத்தை உயர்த்தியிருப்பது பகல் கொள்ளை எனக் கூறிய பொதுமக்கள் , தமிழக அரசின் நடவடிக்கை மீது அதிருப்தி தெரிவித்தனர். 

தமிழக அரசு நேற்று அதிரடியாக பேருந்து கட்டணத்தை உயர்த்தி உள்ளது. சாதாரண கட்டணமாக இருந்த ரூ. 3-ல் இருந்து ரூ. 5 ஆகவும், ரூ. 9-லிருந்து ரூ.17 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், வெளியூர் செல்லும் பேருந்து, சொகுசு பேருந்து கட்டணங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதனால், பயணிகளிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. 

கட்டண உயர்வு குறித்து பொதுமக்கள் கூறுகையில், தமிழக அரசின் இந்தக் கட்டண உயர்வு பகல் கொள்ளை. மக்கள் விரோதசெயல். தமிழக அரசு 20% தான் கட்டணத்தை உயர்த்தியதாகக் கூறி மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறது. 80% கட்டண உயர்வை அமல்படுத்தியுள்ளது, எனக் கூறினர். 

பேருந்து பயணி கோபால் என்பவர் கூறும்போது :- சேலம் செல்ல ரூ. 100 முதல் ரூ. 120 வரை இருந்த பேருந்து கட்டணம் தற்போது ரூ. 200-ல் இருந்து ரூ. 220 வரை உயர்ந்துள்ளது. போக்குவரத்து துறை ஊழியர்களின் பணத்தை வேறு காரணங்களுக்காக செலவு செய்துவிட்டு, அதனை ஈடுசெய்ய இந்த உயர்வை அமல்படுத்தி உள்ளது. இது பகல் கொள்ளை. சாதாரண கட்டணம் என நினைத்து பேருந்தில் ஏறிய பயணிகள் சிலர் பயணம் மேற்கொள்ள முடியாமல் திரும்பினர். இவ்வாறு தெரிவித்தார். 

கமலா என்ற பெண்மணி கூறும்போது, தனக்கு 3 குழந்தைகள் உள்ளது. தன்னுடைய மாத சம்பளமே ரூ.4,000-ம் தான். குழந்தைகள் கல்வி செலவு குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாத நிலை உள்ளபோது இந்தப் பேருந்து கட்டணம் பேரிடியை ஏற்படுத்தி உள்ளது, என்றார்.

மென் பொறியாளர் பிரனேஷ் கூறுகையில், இந்தக் கட்டண உயர்வு என்பது அனைவருக்கும் பொருந்தும். ஏற்கனவே, ஜி.எஸ்.டி.யில் இருந்து மக்கள் மீளாத நிலையில், இந்தப் பேருந்து கட்டண உயர்வு மக்களை மேலும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பேருந்து கட்டண உயர்வை வாபஸ் பெறாவிட்டால் மக்கள் இந்த ஆட்சியை விரைவில் வீட்டுக்கு அனுப்பும் தூரம் வெகுதொலைவில் இல்லை. இந்தப் பேருந்து கட்டண உயர்வு பொது மக்களிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...