அரசு அறிவித்த ஊதியம் வழங்கக் கோரி விசைத்தறி உரிமையாளர்கள் வருவாய் அதிகாரியிடம் மனு

தமிழக அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வை அமல்படுத்தாததால் வாங்கிய கடனை திரும்பிச் செலுத்த முடியாமல் தவிப்பதாகவும், விசைத்தறியாளர்களின் கடனைத் தள்ளுபடி செய்யக்கோரியும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் இன்று மனு அளித்தனர்.

கோவை, ஜனவரி 19

தமிழக அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வை அமல்படுத்தாததால் வாங்கிய கடனை திரும்பிச் செலுத்த முடியாமல் தவிப்பதாகவும், விசைத்தறியாளர்களின் கடனைத் தள்ளுபடி செய்யக்கோரியும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் இன்று மனு அளித்தனர்.



திருப்பூர், கோவை மாவட்டத்தில் 35,000-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. அதில் 90 சதவிகிதம் பேர் கூலியின் அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு 27 சதவிகிதம் மற்றும் 31 சதவிகிதம் கூலி உயர்வு வழங்க ஆணையிட்டது.

இருப்பினும் தற்போது வரை ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலியை உயர்த்தி வழங்கவில்லை என விசைத்தறி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், அரசு அறிவித்த ஊதிய உயர்வை வழங்காததால் 3000-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த 3000 விசைத்தறி கூடங்கள் தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமலும், தங்களது குழந்தைக்கு பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாமலும் வறுமையில் சிக்கியுள்ளது.

இதனால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 300 கோடிக்கு மேலான கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சார்பாக கோவை மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...