கோவையின் முன்னேற்றத்திற்கான "நம்ம கோவை" வாட்ஸ்-ஆப் நண்பர்கள் சந்திப்பு

கோவையின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்டது "நம்ம கோவை" வாட்ஸ்-ஆப் குழு. இந்தக் குழுவில் மாவட்டத்திற்குட்பட்ட முக்கிய அதிகாரிகளும், தன்னார்வலர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி தனியார் விடுதியில் நடைபெற்றது.

கோவை, ஜனவரி 18

கோவையின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்டது "நம்ம கோவை" வாட்ஸ்-ஆப் குழு. இந்தக் குழுவில் மாவட்டத்திற்குட்பட்ட முக்கிய அதிகாரிகளும், தன்னார்வலர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி தனியார் விடுதியில் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன், பொள்ளாச்சி துணை ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன், மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சுஜித் குமார், விமான நிலைய இயக்குநர் மகாலிங்கம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.



நம்ம கோவை வாட்ஸ் ஆப் குழுவின் நிறுவனர் சி. கிஷோர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து, தன்னார்வலர்களும், அதிகாரிகளும் தங்களை அறிமுகம் செய்து உரையாற்றினர்.

இதனைத்தொடர்ந்து, அட்வைத் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ரவிசாம், மாவட்டத்தின் மீதான கண்ணோட்டத்தையும், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் உரையாற்றினார். ராக் அமைப்பின் செயலாளர் ரவீந்திரன், மாவட்டத்தின் மேம்பாட்டிற்கு அரசு நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து, சி.ஆர். சுவாமிநாதன், விமான நிலைய இயக்குநர் மகாலிங்கம், போக்குவரத்து துணை ஆணையர் சுஜித் குமார் உள்ளிட்டோர் தங்களது பணிகள் குறித்தும், கோவையின் வளர்ச்சிக்கு தன்னார்வலர்களின் பங்களிப்பு குறித்தும் பேசினர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...