திட்டமிட்டபடி 25-ம் தேதி ரிலீஸாகிறது ”பத்மாவத்”: 4 மாநிலங்களில் விதிக்கப்பட்ட தடை நீக்கம்

ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட 4 மாநிலங்களில் ”பத்மாவத்” படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது. இதையடுத்து, திட்டமிட்டபடி வரும் 25-ம் தேதி நாடு முழுவதும் இந்தப் படம் ரிலீஸாகிறது.

ஜனவரி 18

ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட 4 மாநிலங்களில் ”பத்மாவத்” படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது. இதையடுத்து, திட்டமிட்டபடி வரும் 25-ம் தேதி நாடு முழுவதும் இந்தப் படம் ரிலீஸாகிறது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், சாகித் கபூர் நடிப்பில் உருவாகி உள்ள படம் பத்மாவத் (பத்மாவதி). சித்தூர் மகாராணி பத்மாவதி வாழ்க்கையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் பத்மாவதியை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி இப்படத்திற்கு ராஜபுத்ர வம்சத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பட ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டது.

பின்னர், சென்சாரின் தலையீட்டுக்கு பின்னர் படம் பத்மாவத் என்ற பெயர் மாற்றத்துடன் வருகிற 25-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. ஆனால், படத்திற்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பின. இதனால், ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் ஹரியானா மாநில அரசுகள் இப்படத்திற்கு தடை விதித்தன.

இதை எதிர்த்து, தயாரிப்பாளர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, 4 மாநிலங்களில் விதிக்கப்பட்ட தடையை நீக்கினார். அதோடு, பிற மாநிலங்களும் பத்மாவத் படத்திற்கு தடை விதிக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டார். உச்சநீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால் திட்டமிட்டபடி இப்படம் வரும் 25-ம் தேதி நாடு முழுவதும ரிலீஸாகிறது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...