திட்டமிட்டபடி 25-ம் தேதி ரிலீஸாகிறது ”பத்மாவத்”: 4 மாநிலங்களில் விதிக்கப்பட்ட தடை நீக்கம்

ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட 4 மாநிலங்களில் ”பத்மாவத்” படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது. இதையடுத்து, திட்டமிட்டபடி வரும் 25-ம் தேதி நாடு முழுவதும் இந்தப் படம் ரிலீஸாகிறது.

ஜனவரி 18

ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட 4 மாநிலங்களில் ”பத்மாவத்” படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது. இதையடுத்து, திட்டமிட்டபடி வரும் 25-ம் தேதி நாடு முழுவதும் இந்தப் படம் ரிலீஸாகிறது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், சாகித் கபூர் நடிப்பில் உருவாகி உள்ள படம் பத்மாவத் (பத்மாவதி). சித்தூர் மகாராணி பத்மாவதி வாழ்க்கையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் பத்மாவதியை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி இப்படத்திற்கு ராஜபுத்ர வம்சத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பட ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டது.

பின்னர், சென்சாரின் தலையீட்டுக்கு பின்னர் படம் பத்மாவத் என்ற பெயர் மாற்றத்துடன் வருகிற 25-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. ஆனால், படத்திற்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பின. இதனால், ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் ஹரியானா மாநில அரசுகள் இப்படத்திற்கு தடை விதித்தன.

இதை எதிர்த்து, தயாரிப்பாளர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, 4 மாநிலங்களில் விதிக்கப்பட்ட தடையை நீக்கினார். அதோடு, பிற மாநிலங்களும் பத்மாவத் படத்திற்கு தடை விதிக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டார். உச்சநீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால் திட்டமிட்டபடி இப்படம் வரும் 25-ம் தேதி நாடு முழுவதும ரிலீஸாகிறது.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...