திரிபுரா, நாகலாந்து உள்ளிட்ட 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு

திரிபுரா சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 18-ம் தேதியும், மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜனவரி 18

திரிபுரா சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 18-ம் தேதியும், மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேகாலயா சட்டப்பேரவை பதவிக்காலம் மார்ச் மாதம் 6-ம் தேதியுடனும், நாகாலாந்து சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் மார்ச் 13 ம் தேதியுடனும், திரிபுரா சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மார்ச் 14-ம் தேதியுடனும் முடிவடைகிறது. இதனையடுத்து, அங்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் செய்தது. தேர்தல் ஆணையர்கள் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், 3 மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியை தில்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஏகே ஜோதி அறிவித்தார். அவர் கூறியதாவது, திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 18-ம் தேதியும், நாகலாந்து, மேகாலயா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதியும் நடக்கும். 3 மாநிலங்களிலும் பதிவான ஓட்டுகள் மார்ச் 3-ம் தேதி எண்ணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...