திரிபுரா சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 18-ம் தேதியும், மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஜனவரி 18
திரிபுரா சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 18-ம் தேதியும், மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேகாலயா சட்டப்பேரவை பதவிக்காலம் மார்ச் மாதம் 6-ம் தேதியுடனும், நாகாலாந்து சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் மார்ச் 13 ம் தேதியுடனும், திரிபுரா சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மார்ச் 14-ம் தேதியுடனும் முடிவடைகிறது. இதனையடுத்து, அங்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் செய்தது. தேர்தல் ஆணையர்கள் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், 3 மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியை தில்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஏகே ஜோதி அறிவித்தார். அவர் கூறியதாவது, திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 18-ம் தேதியும், நாகலாந்து, மேகாலயா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதியும் நடக்கும். 3 மாநிலங்களிலும் பதிவான ஓட்டுகள் மார்ச் 3-ம் தேதி எண்ணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
திரிபுரா சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 18-ம் தேதியும், மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேகாலயா சட்டப்பேரவை பதவிக்காலம் மார்ச் மாதம் 6-ம் தேதியுடனும், நாகாலாந்து சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் மார்ச் 13 ம் தேதியுடனும், திரிபுரா சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மார்ச் 14-ம் தேதியுடனும் முடிவடைகிறது. இதனையடுத்து, அங்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் செய்தது. தேர்தல் ஆணையர்கள் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், 3 மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியை தில்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஏகே ஜோதி அறிவித்தார். அவர் கூறியதாவது, திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 18-ம் தேதியும், நாகலாந்து, மேகாலயா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதியும் நடக்கும். 3 மாநிலங்களிலும் பதிவான ஓட்டுகள் மார்ச் 3-ம் தேதி எண்ணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.