வங்கி கடனை ரத்துசெய்யக் கோரி விசைத்தறி உரிமையாளர்கள் மனு

திருப்பூரில் வங்கி கடனை முற்றிலுமாக ரத்துசெய்யக் கோரி 300-க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

திருப்பூர், ஜனவரி 18

திருப்பூரில் வங்கி கடனை முற்றிலுமாக ரத்துசெய்யக் கோரி 300-க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம், மங்கலம், வேலம்பாளையம், தெக்கலூர், அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.

மேலும், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நூலைப் பெற்று துணியாக நெய்து கொடுத்து அதற்குண்டான கூலி பெறுவது வழக்கம். இந்தக் கூலி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். கடந்த 2014-ஆம் ஆண்டு கூலி உயர்வு பேச்சுவார்த்தை திருப்பூர் ஆட்சியர் முன்னிலையில் நடத்தப்பட்டு 27 மற்றும் 31 சதவிகிதமாக ஒப்பந்தமானது.

இந்நிலையில், ஒப்பந்தப்படி ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வை வழங்காததால் விசைத்தறி உரிமையாளர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகினர். மேலும் வங்கியில் தொழிலுக்காக வாங்கிய கடன் தவணையை கட்ட முடியாத இக்கட்டான சூழ்நிலை உருவானதை அடுத்து கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் வேலுச்சாமி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை முற்றுகையிட்டு வங்கி கடனை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி ஆட்சியர் பழனிச்சாமியிடம் மனு அளித்தனர்.

மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. 

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...