முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 4-ம் தேது இறந்துவிட்டதாக திவாகரன் கூறுவது அவருடைய கருத்து என்று எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
கோவை, ஜனவரி 17
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 4-ம் தேது இறந்துவிட்டதாக திவாகரன் கூறுவது அவருடைய கருத்து என்று எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :-
ஜெயலலிதா மரணத்திற்கு முந்தய நாள் மாலை அவருக்கு இருதய பிரச்சினை ஏற்பட்டது என தகவல் வந்தது.
இருதய பிரச்சினை ஏற்பட்டதை திவாகரன் மாற்றி கூறியிருக்கலாம். ஜெயலலிதா உடல்நிலை குறித்து தகவல் கிடைத்து அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற போது அவருக்கு எக்மோ மீட்டர் பொருத்தப்பட்டு இருந்தது.
மரணம் தொடர்பாக மருத்துவர்கள் சொல்வதை மட்டுமே ஏற்க முடியும்.
திவாரகன் கூறியுள்ள கருத்திற்கு அப்பல்லோ நிர்வாகம்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
திருப்பூர் மருத்துவ மாணவர் மரணம் தொடர்பாக உரிய முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். வருங்காலத்தில் இது போன்று நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
வேதா இல்லம் அரசுடைமையாக்குவதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை.
இ.பி.எஸ் அரசு எதை செய்தாலும் அதை தவறு என சொல்லும் அரசியல்வாதி நான் கிடையாது.
ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், அதை பயன்படுத்தி ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முன்னணியில் இருந்த அமைச்சர்கள் அதிக அளவில் சொத்து சேர்த்துள்ளனர்.
எம்.எல்.ஏ வாக சட்ட சபையில் 4 நாட்கள் அனுபவம் புதிய அனுபவமாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.