2016-ம் ஆண்டு டிச.,04 தேதி மாலையே ஜெயலலிதா இறந்துவிட்டார் : சசிகலா சகோதரர் பகீர் தகவல்

2016 டிசம்பர் 04-ஆம் தேதி மாலையே ஜெயலலிதா உயிரிழந்துவிட்டதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

ஜனவரி 17

2016 டிசம்பர் 04-ஆம் தேதி மாலையே ஜெயலலிதா உயிரிழந்துவிட்டதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். 

மன்னார்குடியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு அவர் பேசும் போது கூறியதாவது:- 2016 டிசம்பர் 4-ந்தேதி மாலை 5.15 மணிக்கே மாரடைப்பால் ஜெயலலிதா இறந்து விட்டார். 4-ந்தேதி இரவே நான் அங்கு சென்றேன். ஜெயலலிதா மரணத்தை ஏன் அறிவிக்கவில்லை என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, ரெட்டி எங்கள் மருத்துவமனையின் கிளைகள் தமிழகம் முழுவதும் உள்ளது. எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் எனக் கேட்டார்.  மருத்துவமனையின் பாதுகாப்புக்காக ஒருநாள் தாமதமாக ஜெயலலிதா மரணம் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் கழுகு ஒன்று மருத்துவமனையில் இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

2017-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மாலை ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில், தற்போது, சசிகலாவின் சகோதரர் திவாகரன் அளித்த தகவல் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...