சட்டப்பேரவைக்கு 6 மாதத்தில் தேர்தல் வந்தாலும், நிச்சயம் எதிர்கொள்ளுவேன் : நடிகர் ரஜினிகாந்த்

தமிழக சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல் வந்தாலும், நிச்சயம் எதிர்கொள்வேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

ஜனவரி 17

தமிழக சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல் வந்தாலும், நிச்சயம் எதிர்கொள்வேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். 

தனது அரசியல் பிரவேசம் தொடர்பாக அவ்வப்போது டுவிட்டர் மூலமாகப் பதிவிட்டு வந்த நடிகர் கமல்ஹாசன் சமூக பிரச்சினைகளையும் அலசினார். இந்த நிலையில், பிப்ரவரி 21-ம் தேதி அரசியல் கட்சிப் பெயரை இருப்பதாகவும், ராமநாதபுரத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க இருப்பதாகவும் அண்மையில் அறிவித்தார். 

ஆரம்பகட்ட சுற்றுப்பயணத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டு உள்ள அவர், சுற்றுப்பயணம் செய்யும் ஊர்களில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகள் என்ன? என்பது பற்றி கணக்கெடுக்கவும் ரசிகர்களுக்கு நடிகர் கமல் உத்தரவிட்டுள்ளார். சுற்றுப்பயணத்தின்போது, அந்தப் பிரச்சினைகள் பற்றி பொதுமக்களோடு கலந்து ஆலோசிக்கவும் முடிவு செய்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினர் மற்றும் தலைவர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர். 

இந்த நிலையில், இன்று போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்தார். ”இருவரும் இனைந்து செயல்படுவோமா என்பது குறித்து காலம் தான் முடிவு செய்யும். 6 மாதத்தில் சட்டப்பேரவைக்கு தேர்தல் வந்தாலும் அதை நிச்சயம் எதிர்கொள்ளுவேன்”  எனக் கூறினார். 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...