கோவை பேரூராதீனம் சாந்த லிங்க அடிகளார் தமிழ் கல்லூரியில் உலகப் பனைப் பொருளாதார குறித்த முன்று நாள் மாநாடு இன்று தொடங்கியது.
கோவை, ஜனவரி 17
கோவை பேரூராதீனம் சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரியில் உலகப் பனைப் பொருளாதார குறித்த முன்று நாள் மாநாடு இன்று தொடங்கியது.

மாநாட்டில் இலங்கை, மொரிசியஸ் உள்ளிட்ட மூன்று நாடுகளைச் சேர்ந்த பனை ஆய்வாளர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துரைகளை எடுத்துரைக்க உள்ளனர். இதன் முதல் நாளான இன்றைய நிகழ்வில், பனை படும் பாடு என்ற பாடல் தொகுப்பு, பனை பொருளாதாரம் குறித்த புத்தகங்கள் வெளியிடப்பட்டது. மேலும், பனை சார்ந்த மதிப்பு கூட்டிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, நிகழ்வு குறித்து ஆதீனம் மருதாசல அடிகளார் பேசுகையில், 'தமிழகத்தின் மாநில மரம் என்ற பெருமைக்குரியது பனை. ஆனால், பனை தொடர்பான விழிப்புணர்வு இல்லாமல் அவைகள் வெட்டப்படுவது வேதனை அளிக்கிறது. பனை மரத்தினை காக்கவும், தரிசு நிலங்களில் பனைமரம் வளர்ப்பதால் பனை சார்ந்த கிராம பொருளாதாரம் மேம்பட வாய்ப்பாக அமையும் என்பதை வலியுறுத்தவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
இம்மாநாட்டில் நிலத்தடி நீரை பாதுகாக்க பனை மரங்களை மீண்டும் குளக்கரைகளில் நடவு செய்ய வேண்டும். பனை பாதுகாப்புக்கு என தனி நல வாரியம் அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன' என்றார்.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக பனை மரம் குறித்த மாணவர்களின் புகைப்பட கண்காட்சி நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.