பேரூராதீனம் சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரியில் உலகப் பனைப் பொருளாதார மாநாடு இன்று துவக்கம்

கோவை பேரூராதீனம் சாந்த லிங்க அடிகளார் தமிழ் கல்லூரியில் உலகப் பனைப் பொருளாதார குறித்த முன்று நாள் மாநாடு இன்று தொடங்கியது.


கோவை, ஜனவரி 17

கோவை பேரூராதீனம் சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரியில் உலகப் பனைப் பொருளாதார குறித்த முன்று நாள் மாநாடு இன்று தொடங்கியது.



மாநாட்டில் இலங்கை, மொரிசியஸ் உள்ளிட்ட மூன்று நாடுகளைச் சேர்ந்த பனை ஆய்வாளர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துரைகளை எடுத்துரைக்க உள்ளனர். இதன் முதல் நாளான இன்றைய நிகழ்வில், பனை படும் பாடு என்ற பாடல் தொகுப்பு, பனை பொருளாதாரம் குறித்த புத்தகங்கள் வெளியிடப்பட்டது. மேலும், பனை சார்ந்த மதிப்பு கூட்டிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, நிகழ்வு குறித்து ஆதீனம் மருதாசல அடிகளார் பேசுகையில், 'தமிழகத்தின் மாநில மரம் என்ற பெருமைக்குரியது பனை. ஆனால், பனை தொடர்பான விழிப்புணர்வு இல்லாமல் அவைகள் வெட்டப்படுவது வேதனை அளிக்கிறது. பனை மரத்தினை காக்கவும், தரிசு நிலங்களில் பனைமரம் வளர்ப்பதால் பனை சார்ந்த கிராம பொருளாதாரம் மேம்பட வாய்ப்பாக அமையும் என்பதை வலியுறுத்தவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

இம்மாநாட்டில் நிலத்தடி நீரை பாதுகாக்க பனை மரங்களை மீண்டும் குளக்கரைகளில் நடவு செய்ய வேண்டும். பனை பாதுகாப்புக்கு என தனி நல வாரியம் அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன' என்றார்.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக பனை மரம் குறித்த மாணவர்களின் புகைப்பட கண்காட்சி நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...