ஆண்டாள் விவகாரம் : வைரமுத்து மற்றும் தினமணி ஆசிரியருக்கு உப்பு அனுப்பும் போராட்டம்

ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்து மற்றும் பத்திரிக்கை (தினமணி) ஆசிரியருக்கு சூடு சொரணை வர பா.ஜ.க. சார்பில் உப்பு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

கோவை, ஜனவரி 16

ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கவிஞர் வைரமுத்து மற்றும் பத்திரிக்கை (தினமணி) ஆசிரியருக்கு சூடு சொரணை வர பா.ஜ.க. சார்பில் உப்பு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.



வார இதழ் ஒன்றிற்குக் கவிஞர் வைரமுத்து எழுதிய ஆண்டாள் குறித்த கட்டுரையில் வெளியிட்ட கருத்திற்கு பல்வேறு தரப்பினர் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவருக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவிஞர் வைரமுத்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கூறி உப்பு அனுப்பும் போராட்டத்தில் பாஜக வினர் ஈடுபட்டனர். 

கவிஞர் வைரமுத்து யாராவது மனம் புண்பட்டு இருந்தால் மன்னிப்பு கேட்பதாக மட்டுமே கூறியிருப்பதாகவும், பொதுவாக மன்னிப்பு கேட்கவில்லை எனக் கூறி அவருக்கும், அவரது கட்டுரையை வெளியிட்ட தினமணி ஆசிரியருக்கும், சூடு, சொரணை வர வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்து ஊர்வலமாகச் சென்று தபால் நிலையத்தில் உப்பும் அனுப்பும் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, வைரமுத்து மேற்கொள் காட்டி எழுதியதாக சொல்லப்படுவது தவறு என்றும், அப்படி ஒன்றும் வெளிநாட்டவர் எழுதவில்லை என்றும் அவர்கள் கூறினர். 

கவிஞர் வைரமுத்துவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை முதல் ஜீயர் இருக்கும் உண்ணாவிரதத்திற்கு முழு ஆதரவு பாஜக தரும் எனத் தெரிவித்தார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...