சாதி மறுப்பு, கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களின் ”சமத்துவப் பொங்கல்”

கோவையில் சாதி மறுப்பு மற்றும் கலப்பு திருமணம் செய்துகொண்டவர்கள் ஒன்றிணைந்து சமத்துவப் பொங்கல் வைத்து உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

கோவை, ஜனவரி 16

கோவையில் சாதி மறுப்பு மற்றும் கலப்பு திருமணம் செய்துகொண்டவர்கள் ஒன்றிணைந்து சமத்துவப் பொங்கல் வைத்து உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். 

வீரகேரளம் அருகேயுள்ள தோட்டத்தில் சாதி மறுப்பு, கலப்பு திருமணம் செய்து கொண்ட 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சார்ந்தவர்கள் சமத்துவ பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர். கடந்த 1997 ஆண்டு முதல் இன்று வரை இருபது ஆண்டுகளுக்கு மேலாக பொங்கல் திருவிழாவின் போது ஒன்று கூடி சாதி, மதம் கடந்து பொங்கலைக் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், இந்த ஆண்டும் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 



இந்தப் பொங்கல் விழா நிகழ்ச்சியில் குண்டு ஆடுதல் முதல் பம்பரம், பட்டம் விடுதல், உரி அடித்தல் உட்பட பாரம்பரியம் மிக்க விளையாட்டுப் போட்டிகள் பரிசளிப்பு இல்லாமல் நடைபெற்றது. மேலும், குழந்தைகளுக்குப் பட்டம் செய்வது முதல் பறக்கவிடுவது வரை சொல்லி கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தாங்கள் வர முடியவில்லை என்றாலும் கூட தங்களது வயது முதிர்ந்த பெற்றோர்களை அனுப்பி நண்பர்களின் குழந்தைகளோடு, குழந்தையாக விளையாடி மகிழ்ந்தனர். சொந்தகாரர்களுக்கு அழைப்பு இல்லாமல் நண்பர்களின் குடும்பம் மட்டுமே இணைந்து சமத்துவ பொங்கலை இனிமையாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். 

சாதிய கொலைகள் பல அரங்கேறி வரும் நிலையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வரும் இந்த சமத்துவப் பொங்கல் விழா அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...